Tuesday, June 2, 2020

மக்காச்சோளம் பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்:

மக்காச்சோளம் பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்:

corn-Maize,மக்காச்சோளம்

  • மக்காச்சோளம் இன் தாயகம் நடு அமெரிக்கா என்று கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அமெரிக்க கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது.
  • தற்பொழுது மக்காச்சோளம் உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம் ஆகும். இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றைப் பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர்.
  • பொதுவான மக்காச்சோளப் பயிரைக் காட்டிலும், கலப்பின மக்காச்சோளப் பயிர்கள் அதிக விளைச்சலைத் தருவதால் விவசாயிகள் கலப்பினங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். சில மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளரும் தன்மை கொண்டவை.
மக்காச்சோளம் எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

மக்காச்சோளம் இன் ரகங்கள் இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1, கலப்பின கோ 6, வீரிய ஒட்டு இரகங்களான கோ- 1, கங்கா- 5, கே.எச் -1,2,3, கோ.எச்.எம் -5, எம் -900, எம்.ஹைசெல், சின்ஜென்டா, என்.கே – 6240, பயனீர்- 30 வி- 62, பயனீர்- 30 வி – 92 மற்றும் பிக்பாஸ் ஆகியவை முக்கிய இரகங்களாகும்.

பருவம்

மக்காச்சோளம் மானாவாரியாக ஆடி (ஜீன் – ஜீலை) மற்றும் புரட்டாசி (செப்டம்பர் – அக்டோபர் ) மாதத்திலும், இறவைப் பயிராக தை (ஜனவரி – பிப்ரவரி) மற்றும் சித்திரை (ஏப்ரல் – மே) மாதத்திலும் சாகுபடி செய்ய ஏற்றது.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றது. களிமண் நிலமும், அதிக நீர் தேங்கும் நிலமும் சாகுபடிக்கு ஏற்றது அல்ல.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் தொழு உரம் இட்டு உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். இறவை சாகுபடிக்கு ஏற்றவாறு பார்கள் அமைக்க வேண்டும்.

விதையளவு

ஏக்கருக்கு 6 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி என்ற பூசனக் கொல்லியை கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்.

விதைத்தல்

விதை நேர்த்தி செய்த விதைகளை பாருக்கு பார் 60 செ.மீ, செடிக்குச் செடி 20 செ.மீ இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் 4 செ.மீ ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

ஊன்றிய உடன் நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

மக்காச்சோளம் உரங்கள்:

ஏக்கருக்கு 119 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 34 கிலோ பொட்டாஸ் தேவைப்படும். இதில் அடியுரமாக 30 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 17 கிலோ பொட்டாஸ் இடவேண்டும். விதைத்த 25ம் நாள் மேலுரமாக 60 கிலோ யூரியா மற்றும் 45ம் நாள் 29 கிலோ யூரியா, 17 கிலோ பொட்டாஸ் இடவேண்டும்.

இயற்கை உரமிடல் முறையில் 15ஆம் நாளில் வடிகட்டிய பஞ்சகாவ்யா 200 லிட்டரை பாசன நீர் வழியாகக் கொடுக்கவேண்டும். 40 நாளில் பூக்களோடு இருக்கும் தருணத்தில் மீண்டும் ஒரு முறை 200 லி்டடர் பஞ்சகாவ்யாவைப் பாசன நீருடன் கொடுத்தால் பக்கவாட்டில் தோன்றும் கதிர்கள் விரைவான வளர்ச்சி அடையும்.

களை நிர்வாகம்

விதைத்த 3 நாட்களுக்குப்பின் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் பொழுது களைக்கொல்லியான அட்ரசின் 50 சதம் நனையும் தூள் 200 கிராம் அல்லது ஆலாகுளோ 1.6 லிட்டர் / ஏக்கர் என்ற அளவில் 360 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான மூலம் தெளிக்கவேண்டும். களைக்கொல்லி பயன்படுத்தவில்லை எனில் விதைத்த 17ம் நாளில் ஒரு முறையும், 40 முதல் 45வது நாளில் ஒரு முறையும் கைக்களை எடுக்கவேண்டும்.

அறுவடை

60 மற்றும் 70ஆம் நாட்களில் கதிர்கள் ஒரே சீராக வளரத் தொடங்கும். 100ஆம் நாளில் கதிர்களை உரித்துப் பார்த்தால் சிவப்பு நிறத்தில் மணிகள் காணப்படும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பாசனத்தை நிறுத்தி விடவேண்டும். 110ஆம் நாளில் தட்டைகள் காய்ந்து நிற்கும். கதிர்களை மட்டும் ஒடித்து எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.

மகசூல்

ஒரு ஏக்கருக்கு 2,500 முதல் 3,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

மக்காச்சோளத்தின் நோய்கள்:
மேடிஸ் இலைக்கருகல் நோய்:

ஆரம்ப நிலையில் (தேமல்) சிறியதாக இருக்கும். இவை பரவி ஒன்றிணைந்து பெரும்பாலான இலைகளை கருக்கிவிடும்.

நோய் அறிகுறி மற்றும் தாக்கம், பயிர் வகையினைப் பொறுத்து மாறுபடும்.

தடுப்பு முறைகள்:

எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகைகள் – டெக்கான், வி.எல. 42, பிரபாட், கே.ஹ – 5901, ப்ரோ – 324, ப்ரோ – 339, ஐசிஐ – 701, எஃப் – 7013, சர்டஜ், டெக்கான் 109.

கேப்டாஃபாலினை இரண்டு முறை வயலில் தெளிக்கலாம்

சோளம் அடிசாம்பல் நோய்:

இலையின் அடிபாகம் வெளிப்பச்சை (வெளிர் பச்சை) அறிகுறி காண்பிக்கும்.

வெள்ளைநிற பூஞ்சான வளர்ச்சி இலைகளில் காணப்படும் மகரந்தக்குஞ்சம் பூவிலை நோய் அறிகுறி காண்பிக்கும்.

நோயின் தாக்கத்தை தாங்கிக்கொள்ளும். பயிர்வகைகள் அறிகுறிகளைக் காண்பித்தாலும் வித்துகள் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாது.

தடுப்புமுறை:

எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர்கள் – ஈ.எச் – 43861, ஏ9, இன்டிமிட் – 345.

செங்கோடு சாம்பல் நோய்:

கீழ் உள்ள இலைகளில் பழுப்புநிற தேமல்/கோடு தோன்றும். அவை இலை நரம்பின் இடைப்பகுதியில் சீராக பரவும்.

கோடுகள் செந்நிறமாக மாறும்.

விதை (சோள மணி) சரியாக வளராது. பயிர் பூக்கும் நிலையை அடையும் முன்னரே இறக்கும் வாய்ப்புண்டு.

பூஞ்சான், இலைகளில், பஞ்சு போன்று வளரும்.

பூ மற்றும் இலை பகுதிகள் எவ்வித அறிகுறிகளையும் காண்பிக்காது.

தடுப்புமுறை:

எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர்கள் – சோஹினூர், பரபாட், ஐ.சி.ஐ – 703, பி.ஏ.சி – 9401, சீட்டெக் – 2331, பையோ – 9681.

செம்புள்ளி (பழுப்பு புள்ளி) நோய்:

இந்நோய் தாக்கப்பட்ட செடியின் இலைகள் பசுமை சோகை புள்ளி அறிகுறி காண்பிக்கும்.

உயர் தட்பவெப்ப நிலை, உபரிநீர் – இவை இரண்டும் இந்நோய் பரவுதலை அதிகப்படுத்தும்.

கணு மற்றும் இடைக்கணும் பகுதிகளில் அரக்கு நிற நைவுப்புண் காணப்படும்.

மையநரம்பிலும் அரக்கு நிற புள்ளிகள் இருக்கும்.

முற்றிய நிலையில் அழுகல் மற்றும் தண்டு காய்தல் ஏற்படும்.

கட்டுப்பாட்டு முறைகள்:

முன் விதைத்தல் நோய் தாக்குதலைக் குறைக்கும்.

பயிரை சுற்றி புல் வளர்தலைத் தவிக்கவும்.

ஊடுருவும் பூஞ்சான்கொல்லியான ‘மெட்டாலாக்ஸில்’ லினை பயன்படுத்தவும்.

எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களான – கங்கா 11, டெக்கான், டெக்கான் 103, கம்போசிட் சுவான் 1, எஃப் – 9572, ஜே.எம்.எச் – 178 – 4.

பித்தியம் தண்டு அழுகல்நோய் (பித்தியம் அஃபானிடெர்மேட்டம்):

அடித்தண்டில் உள்ள இடைக்கணு, அழுகி காணப்படும்.

சாய்தல் ஏற்படலாம்.

அழுகிய இடைக்கணு திருகி இருக்கும்.

எர்வினியா அழுகல் நோயிலிருந்து வேறுபடுத்த அருகிலுள்ள ஆய்வுக் கூட நிபுணர்களின் உதவியை நாடலாம். உறுதி செய்த பின்னர் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றவும்.

கட்டுப்பாட்டு முறை:

சரியாக நீர் வடித்தல் வேண்டும்

முன் அறுவடையின் பயிர் களங்களை அகற்ற வேண்டும்.

எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள் – கங்கா, சஃபேத் – 2,

சரியான எண்ணிக்கை – 50,000 / எக்டர்

பாக்டீரியல் தண்டு அழுகல் நோய் (எர்வினியா கிரிஸான்திமி):

செந்நிற அழுகல் (நீர்கோத்தது, வழவழப்பாக இருக்கும்) அடித்தண்டில் ஏற்படும் சுலபமாக உடைந்து விடும்.

அழுகிய தண்டிலிருந்து துர்நாற்றம் வீசும்.

பாதிக்கப்பட்ட செடிகள் சீக்கிரம் இறந்து விடும்.

தடுப்பு முறைகள்:

வரப்புகளில் உள்ள களைச் செடிகளை அகற்றவேண்டும்.

நீர்த்தேக்கத்தைத் தவிர்க்கவும்.

கரியழுகல் நோய்: (கேக்ரோஃபோமினா ஃபாசியேலினா):

பூப்பூத்த 1-2 வாரங்களில் நோய் அறிகுறிகள் காணப்படும்.

தக்கைப் பகுதி (உட்சோறு) அழுகி விடும்.

இந்நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரி, நாற்றுகளின் வேரில் உட்புகும் பூப்பூத்த பின்னர் நோய் அறிகுறி காணப்படும்.

தண்டு உள்பகுதி கருமை நிற அழுகல் போல் தோற்றமளிக்கும் நீர் செல்லும் திசுக்கள் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் பயிர்கள் உயிரிழக்கும்.

பாதிக்கப்பட்ட அடித்தண்டு இடைக்கணு பகுதிகளில் சிறிய தகடு போன்ற வளர்ச்சியைக் காணலாம். அவை அடுத்த விதைத்தலின் போது முளைத்து பயிர்களை தாக்கும். தகடுகள், இந்நச்சுயிரிகளின் விதைகளாகும்.

பாதிக்கப்பட்ட சோகைகள் கருமை நிறத்திலிருக்கும்.

அதிக தட்பவெப்ப நிலையிலும் (30-420 செ) மற்றும் குறைவான ஈரப் பதத்திலும் இந்நோய் வேகமாக பரவும்.

கட்டுப்பாடு:

பூ மலரும் பருவத்தில் நீர் நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நூறு கிலோ தொழுவுரத்துடன் ஒரு கிலோ ‘டிரைக்கோடெர்மாவைக்’ கலந்து பத்து நாட்களுக்கு வைக்கவும். பின்னர் அவற்றை வயல்களில் இடலாம்.

ஃபுசேரியம் தண்டு அழுகல் நோய்: (ஃபுகேரியம் மொனலிஃபார்மே):

பாதிக்கப்பட்ட பயிர்களின் பச்சை நிறம் மங்கிவிடும். கீழ்தண்டுகள் பழுப்பு நிறம் அடையும்.

பாதிக்கப்பட்டு தண்டின் உள்புறத்தில் சிவப்பு நிற அழுகிய தக்கை காணப்படும்.

சாற்றுக் குலாய் (நீர் கடத்தும் செல்கள்) தவிர மற்ற திசுக்கள் பூஞ்சானின் அழுகலால் பாதிக்கப்படும்.

தடுப்பு முறை:

பயிர்சுழற்சி கடைபிடிக்க வேண்டும்.

எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்களை வளர்க்கவும் – ரஞ்சித், கங்கா 5.

பாதிக்கப்பட்ட பயிர்களின் வித்துக்களை பயன்படுத்தலாம்.

ஒற்றைக் கலப்பு – சி.எம் 103 x சி.எம் 104, சி.எம் 400 x சி.எம் 300.

மக்காச்சோளம் பயன்கள்:-
  • சம அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டுள்ள மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.
  • மஞ்சள் நிற கர்னல்களை கொண்ட சோளம் குரல் வளைவில் ஏற்படக்கூடிய நோய் அபாயத்தை தவிர்க்கிறது. மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.
  • சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் எதிர்க்க உதவிபுரிகிறது.
  • இயற்கை உணவான சோளம் நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தத்தை தடுக்கிறது.
  • அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ள சோளம் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, செரிமானத்திற்கு உதவி புரிகிறது.
  • copied:https://agriculturetrip.com/

No comments:

Post a Comment

add-15

<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?p...