Wednesday, June 3, 2020

மாதுளைப்பழம் (Pomegranate)

மாதுளைப்பழம் (Pomegranate)

Pomogranite Fruit

மாதுளை குறுமரம் வகையை சேர்ந்த பழவகை ஆகும். இதன் தாயகம் ஈரான் நாடு. ஈரானை அடுத்து அதிக அளவில் மாதுளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் மொத்த உற்பத்தியில் 77% மகாராஷ்டிராவிலிருந்து உற்பத்தியாகிறது.

உலக நாடுகளில் ஈரான்,இந்தியாவிற்கு அடுத்தபடியாக பாக்கிஸ்தான்,பங்களாதேஷ்,சீனா,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அதிக அளவில் மாதுளை உற்பத்தி செய்கின்றது.

பயிரிடும் முறை:
  • ஜூன் முதல் டிசம்பர் மாதங்கள் மாதுளை பயிரிடுவதற்கு சிறந்த பருவங்கள் ஆகும். இந்த மாதங்களில் பயிரிடும்பொழுது சிறந்த விளைச்சலை பெற முடியும்.
  • மணல் மற்றும் உவர் மண் உட்பட எல்லா வகையான மண்ணிலும் செழிப்பாக வளரும் தன்மை உடையது.
  • பயிரிடும் நிலத்தை நன்கு உழுது 60 செ.மீ ஆழம் மற்றும் அகலம் உடைய குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் 3 மீட்டர் இடைவெளிகளை இருக்குமாறு குழிகளை எடுக்க வேண்டும். குழிகளில் தொழுஉரம் மற்றும் மண் கலந்து ஒரு வாரம் குழிகளை ஆற விட வேண்டும்.
  • பின்பு வேர் விட்ட மாதுளை குச்சிகள் அல்லது செடிகளை குழியின் நடுவில் வைத்து மண் போடு மூட வேண்டும். பின் நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. அதிக அளவு தண்ணீர் பாய்ச்ச கூடாது. ஆனால் பூக்கள் பூக்கும் பொழுதும் காய்கள் காய்க்கும் பொழுதும் அதிக அளவு நீரும் தொழுவுரமும் இட்டு நன்கு பராமரித்தால் நல்ல மகசூலை பெறலாம்.
  • மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு செடிகளுக்கும் 5 கிலோ மண்புழு உரம் மற்றும் 2 கிலோ தொழுஉரம் வைத்து வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • ஆறு மாதங்களில் செடிகளில் பூ பூக்க தொடங்கிவிடும். ஆனால் அந்த பூக்களை உதிர்த்து விட வேண்டும். குறைந்தது 24 மாதங்கள் ஆன பிறகே காப்புக்கு விட வேண்டும். அதற்கு முன்பாக காய்க்க விட்டால் செடிகளின் வளர்ச்சி தடைபடும்.
  • அடிக்கடி களைகளை நீக்கி பராமரிக்க வேண்டும். அதிக கலைகள் செடியின் வளர்ச்சியை தடுக்கும். ஆறாவது மாதத்தில் செடியில் அதிக கிளைகள் இருக்கும் , அப்பொழுது ஆரோக்கியமான நான்கு கிளைகளை விட்டுவிட்டு மீதி கிளைகளை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் செடிகள் நன்கு ஆரோகியமான வளரும்.
மாதுளைப்பழம் (Pomegranate)
மாதுளைப்பழம் (Pomegranate)
மாதுளையின் பயன்கள்:
  • மாதுளம் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளதால் சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும். எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழ ஜூஸ் அருகும்பொழுது அதிக அளவு ஆற்றல் கிடைக்கும். மாதுளை வைரஸ் கிருமிகளை உடனடியாக அழித்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்க வல்லது.
  • குடல் புண் மற்றும் வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி மாதுளை பழத்திற்கு உண்டு.
  • புதிய ரத்தத்தை உற்பத்திசெய்யும் திறன் மாதுளை பழத்திற்கு உண்டு. எனவே ரத்த சோகை உள்ளவர்கள் அதிக அளவு மாதுளை பழம் சாப்பிடும்பொழுது உடலில் அதிக அளவு ரத்தம் சுரக்கும்.
  • ஒரு ஸ்பூன் மாதுளை ஜூஸ் மற்றும் ஒரு ஸ்பூன் சந்தானம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி பாத்து நிமிடம் களைத்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

copied:https://agriculturetrip.com/

No comments:

Post a Comment

add-15

<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?p...