Wednesday, July 1, 2020

add-15

<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?pid=61120249650402131'></script><!-- End: Star-Clicks.com -->

Tuesday, June 30, 2020

ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்தையும் அள்ளித் தரும் வாடாமல்லி!


வாடி விடும் பூக்களுக்கு மத்தியில், எப்போது பார்த்தாலும் அப்போதுதான் மலர்ந்தது போல் வாடாமல் இருக்கும் பூ இந்த ''வாடாமல்லி''. இது வறட்சியான நிலத்தில் கூட வளரக் கூடிய ஒரு செடியாகும். இந்த செடிகள் மிகவும் குறைவாக உயரம் வரை மட்டுமே வளரும். வாடாமல்லி பூக்கள் எளிதாக சந்தைகளில் அன்றாடம் கிடைக்க கூடிய பூ வகைகளில் ஒன்றாகும்.

கோம்பிரினா குளோபோசா (Gomphrena globosa)என்பது இதன் தாவர பெயர் ஆகும். குளோப் அமராந்த் (Globe amaranth) என்ற பெயரும் இதற்கு உள்ளது.
ஊதா, வெள்ளை, சிவப்பு என பல நிறங்களில் பூக்கும் இயல்பு கொண்டது. என்றாலும் ஊதா நிற பூக்களே அதிக அளவில் வணிக ரீதியாக பயிரிடப்படுகிறது. வாடாமல்லி பூ மாலை கட்டவும், அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு அதி உன்னத மருத்துவ குணங்களும் கொண்டது.

வாடாமல்லி எப்படி பயிரிடுவது..? - (How to Cultivate)

வாடமல்லியை, ஆனி மாதம் (ஜூலை - July) பயிர் செய்ய ஏற்ற பருவம் ஆகும். தண்ணீர் தேங்காத செம்மண் வகைகள் சாகுபடிக்கு சிறந்தது. ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 10 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும். நிலத்தை நன்கு உழுது 3x10 செ.மீ அளவுள்ள பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்தியின் மேல் மக்கிய தொழுஉரம் இட வேண்டும். பின்பு விதைகளை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும். பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

நிலம் தயாரித்தல் ( How to prepare land)

நிலத்தை 3 முதல் 4 உழவுகள் வரை உழுது மண்ணை பன்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். 500 கிராம் அசோஸ்பைரில்லத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து நடுவதற்கு முன் நாற்றை நனைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். நிலத்தின் தன்மையை பொருத்து, தேவைப்படும் அளவிற்கு ஏற்ப பார்கள் அமைத்து 30, 35 நாள் வயதுடைய நாற்றை 2 அடிக்கு 1 அடி என்ற விகிதத்தில் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நாற்றை பார்களின் இருபுறமும் நடவு செய்யலாம்.


நீர் மேலாண்மை (Water Management)

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 5 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாசனம் செய்தால் போதுமானது. நடவு செய்த 20வது நாள் மற்றும் 40 நாட்களில் களை எடுக்க வேண்டும். வயலில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். களை எடுத்தப்பின் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 25 கிலோ கடலைப்புண்ணாக்கு கலந்து செடிகளின் அடிப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள் ( How to protect)

காஞ்சாரை நோய் தாக்கினால் செடியின் நுனி கருகி காணப்படும். அதேபோல் பூ கருகி காய்ந்து விடும். இதனை கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து பயிருக்கு தெளிக்க வேண்டும். நூற்புழு தாக்கினால் செடி மேலிருந்து கீழாக பட்டுக்கொண்டே வரும். இதனை கட்டுப்படுத்த நட்ட 40ம் நாள் அல்லது முதல் களையின் போது போரெட் அல்லது பியூரடான் குருணை மருந்துடன் டி.ஏ.பி அல்லது வேப்பம் புண்ணாக்கை சேர்த்து வயலில் தூவி விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை ( Harvesting)

பூக்கள் பூத்துக்குலுங்க ஆரம்பித்தவுடன், பூக்களின் தேவையைப் பொருத்து சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம்.

மருத்துவ பயன்கள் - (Medical benefits)

  • வாடாமல்லி பூக்களை பயன்படுத்தி சளி, இருமல், ஆஸ்துமாவுக்கான மருந்தை தயாரிக்கப்படுகிறது.

  • வாடாமல்லியை அரைத்து அதன் விழுது ஒரு கப், தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து சருமத்தில் பூசினால், சருமமானது மிருதுவாகும்.

  • தோலின் கரிய நிறம் மாற்றம் அடையும். நுண் கிருமிகளை அழிக்கக் கூடிய தன்மை இந்த மலருக்கு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக வாடாமல்லி விளங்குவதால், உடலின் அனைத்து உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கும் தன்மை உடையதாக விளங்குகிறது.

  • பீட்டா சயனீஸ், ஆல்பா சயனீஸ் என்று சொல்லக் கூடிய வேதிப்பொருட்கள் வாடாமல்லியில் காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு வேதிப் பொருட்கள் காரணமாக வாடாமல்லி ஆன்டி பயாட்டிக்காக செயல்படுகிறது. இதனால் இருமலை தடுக்கக் கூடியதாகவும், காய்ச்சலை தணிக்கக் கூடியதாக வாடாமல்லி வேலை செய்கிறது.

  • குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வெற்றிலையில் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒன்றின் மீது ஒன்று அடுக்காக வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வைப்பதால் சில நாட்களில் வலி மற்றும் வீக்கம் சரியாகும்.

  • வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி ஆறவைத்து கண்களை கழுவினால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பு சரியாகும். இதன் இலை மற்றும் பூக்களைப் பயன்படுத்தி சேற்று புண்கள், கொப்புளங்களை எளிதில் குணமாக்கலாம்.

copied:tamil.krishijagran.com/

Sunday, June 28, 2020

ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி!!


கீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்பது இல்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கூட கீரை சாகுபடி செய்யலாம். இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. கிணற்று தண்ணீர் கொண்டு கூட நாம் கீரையைப் பயிடலாம்.

பொன்னாங்கண்ணி சாகுபடி முறை 

சிறிய வடிவிலான இலைகளைக் கொண்ட பொன்னாங்கண்ணிக் கீரை தரையோடு படர்ந்து வளரும்.

பொன்னாங்கண்ணி கீரையானது இந்தியா முழுவதும் காணப்படும் படர் பூண்டு வகையைச் சேர்ந்தது. இதனை அறுத்துவிட்டால்,மீண்டும் மீணடும் துளிர்க்கும் தன்மையே இதன் சிறப்பு. எனவே வீட்டில் எளிதாக இதனை வளர்க்க முடிகிறது.

வகைகள்

சீமை பொன்னாங்கண்ணி
நாட்டுப் பொன்னாங்கண்ணி

பயிர் செய்ய ஏற்ற பருவம்

இதனை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். எனினும், சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகியவை ஏற்ற பருவங்கள் ஆகும்.  

மண்

நல்ல மண்ணுடன் மணல் கலந்து சிறிது அமிலத்தன்மை கொண்ட இருமண் நிலம், செம்மண் நிலம் ஆகியவை பொன்னாங்கண்ணி கீரை சாகுபடிக்கு உகந்தவை.

நிலம் தயாரித்தல்

முதலில் நிலத்தை இரண்டு மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பின்னர் நிலத்திற்கு தேவையான உரத்தை பரவலாகக் கொட்டி உழவு செய்து நிலத்தைப் பயன்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவுக்கு பாத்திகள் அமைப்பது நல்லவது



விதைத்தல்

விதைகள் சிறியதாக இருப்பதால், அதனுடன் மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். பின்னர் கையால் கிளறி மெல்லிய போர்வை போல் அமைத்து பாசனம் செய்ய வேண்டும்.

தண்ணீர்

விதைகள் விதைத்தவுடன் நீர் பாய்ச்சுவது சிறந்தது. விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். பின்னர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்

மாதத்திற்கு இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கரைசல் போதுமானது. இதனால், கீரைகளின் வளர்ச்சி ஒரே மாதிரி சீராக இருக்கும்.

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்!!

பாதுகாக்கும் முறைகள்

களைகளைக் களைதல்

விதைத்த ஏழு நாட்களிலேயே விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். எனவே பத்து முதல் பதினைந்து நாட்கள் கழித்து, களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, அதிகப்படியான பயிர்களை களை எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

பூச்சி தாக்குதல்

பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட்டால், அதில் இருந்து கீரைச் செடிகளைக் காப்பாற்ற, நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றரையும், சம்மாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டு சிறுநீரில், கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின்னர், பத்து லிட்டர், தண்ணீருக்கு 300 மில்லி லிட்டர் கரைசல் என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

பொன்னாங்கண்ணிக் கீரையை 5 சென்டி மீட்டர் உயரம் வரை வளரவிட்டு அறுவடை செய்வது சிறந்தது. அறுவடைக்கு குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்ல மகசூலைத் தரும்.



நன்மைகள்

பொன்னாங்கண்ணி கீரையில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சுத்துக்கள் மற்றும் வைட்டமின் சி (Vitamin C ) நிறைந்திருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தர வல்லது.
கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்ற கண்நோய்களைக் குணமாக்கும் வல்லமை படைத்தது. பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து ஒருவாரம் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாகத் தெரியும்.
இந்த கீரையுடன் மிளகும், உப்பும் கலந்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

வேளாண் நிலங்களில் மரங்கள் நடும்போது கவனிக்க வேண்டியவை!!

இதில் கால்சியம் அதிகளவில் இருப்பதால், எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்ந்து வதக்கி தொடர்ச்சியாக சாப்பிட்ட வந்தால், மூல நோய் படிப்படியாக குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தைலமாகப் பயன்படுத்தினால் கூந்தல் நன்றாக வளரும். இவ்வளவு நன்மை தரும் பொன்னாங்கண்ணிக் கீரையை நாமும் உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

பயிர்களில் பூச்சி தாக்குதலா? ஆர்கானிக் உரங்களை பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம்!


வளர்ந்து வரும் பயிர், செடி, கொடிகளில் பூச்சித் தாக்குதல் என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்தாமல் ஆர்கானிக் உரங்களை (வீட்டுத் தயாரிப்பு உரங்களை) பயன்படுத்தி பூச்சித் தாக்குதல்களில் இருந்து விரைவில் பயிர்களை காப்பற்றலாம் என்கிறார் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முனைவர் மு .உமா மகேஸ்வரி.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் பயிர், செடி, கொடி, மரங்கள் ஆகியவை வளர்கின்றன. பயிர்களை நோய் தாக்காமல் இருக்கவும், பூச்சி தாக்குதல் மற்றும் அதிக விளைச்சல் போன்றவற்றிற்காக நாம் ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இதனால் நல்ல ஊட்டச்சத்துள்ள பயிர் மற்றும் காய்கறிகளை மறந்து வருகிறோம்.

ஆர்கானிக் உரங்களை (இயற்கை கரிம உரங்கள்) பயன்படுத்துவதன் மூலம், பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து விரைவில் காக்க முடியும் என்றும் பயிர் செடி கொடிகளை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்த்தெடுக்க முடியும் என்கிறார் முனைவர் உமா மகேஷ்வரி. அவருடை சில ஆர்கானிக் உரங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.

பிரம்மாஸ்திரம்

தேவையான பொருட்கள்

10 லிட்டர் கோமியம் , 5 கிலோ அரைத்த வேப்பிலை, அரைத்த சீதா, பப்பாளி, மாதுளை, கொய்யா இலைகள் தலா 2 கிலோ என அனைத்தையும் கலந்து நன்கு கொதிக்க விட்டால், கிடைக்கும் கரைசலே பிரம்மாஸ்திரம் ஆகும்.

பயன்படுத்தும் முறை

ஒரு நாள் கழித்து வடிகட்டி, 2 – 2.5 லி பிரம்மாஸ்திரத்தை, 100 லி நீரில் கலந்து தெளித்தால், அனைத்து பூச்சிகளும் குறையும்.


அரப்பு - மோர் கரைசல்

தேவையான பொருட்கள்

4 லிட்டர் மோர் , ஒரு லிட்டர் இளநீர் , 250 கிராம் பப்பாளி பழ கூழ், 100 கிராம் மஞ்சள் தூள், 10 முதல் 50 கிராம் பெருங்காயம் தூள் ஆகியவற்றைக் கலந்து கரைசலாக்கிக் கொள்ளவும். அவற்றுடன் வேம்பு, துளசி, அரப்பு, சீதாப்பழம், நொச்சி, கற்றாழை மற்றும் புதினா இலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கலந்து விடவும். இதனை 7 நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

அரப்பு (மற்றொரு முறை)

தேவையான பொருட்கள்

வேம்பு, புங்கம், அல்லது மலை வேம்பு 1-2 கிலோ, சீதாப்பழம் அல்லது தங்க அரளி 200-250 கிராம், எட்டி100-250 கிராம், கடுக்காய் சுண்டக்காய் 1-2- கிலோ, பச்சை மிளகாய் 500-1000 கிராம், வில்வம் பழம் 5-10 எண்ணிக்கை, அல்லது ஊமத்தை பழம் 10-20 எண்ணிக்கை.

தயாரிக்கும் முறை

மேலே பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து ஒரு கரைசலை உருவாக்க வேண்டும். 12 மணி நேரம் அந்த கரைசலை நொதிக்க விட வேண்டும்.

பயன்படுத்தும் முறை

ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.


புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தேவையான பொருட்கள்

வேம்பு, புங்கம், அல்லது மலை வேம்பு 1-2 கிலோ அல்லது 250-500 கிராம், சீதாப்பழ அல்லது தங்க அரளி 200-250 கிராம், எட்டி100-250 கிராம், கடுக்காய் சுண்டக்காய் 1-2- கிலோ, பச்சை மிளகாய் 500-1000 கிராம், வில்வம் பழம் 5-10 எண்ணிக்கை, அல்லது ஊமத்தை பழம் 10-20 எண்ணிக்கை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தயாரிக்கும் முறை

இந்த பொருட்களை ஒன்றாகக் கலந்து ஒரு கரைசலை உருவாக்க வேண்டும். 12 மணி நேரம் இக்கரைசலை நொதிக்க விட வேண்டும். பின்பு அது பசை போல் மாறிவிடும்.

பயன்படுத்தும் முறை

1 கிலோ பசையை 100-125 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பு செய்யலாம். இவ்வாறு உபயோகிப்பதின் மூலம் இயற்கையாக கம்பளிப்பூச்சி புழுக்கள், இலைச்சுருள் புழு, தண்டு துளைப்பான் ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை

இந்த பிரச்சனை பொதுவாக மிளகாய், காய்கறிகள் மற்றும் பருத்தியில் ஏற்படுகிறது. பூச்சிகள் எல்லாம் இலைகள் மற்றும் கிளைகளை தாக்குகிறது. இந்த தாக்குதலின் விளைவாக இலைகள் சுருண்டு கொட்டத் துவங்கி விடும். பின்வரும் ஆர்கானிக் உரம் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்

லண்டானா காமரா, வேம்பு, நொச்சி, புகையிலை மற்றும் சிரியாநங்கை இலைகளில் 2-3 கிலோ எடுத்துக்கொள்ளவும். சீதாப்பழம், கற்றாழை, பிரண்டை அல்லது வில்வம் பழம் (5 -10) அல்லது பச்சை மிளகாய் (2 -3 கிலோ) இவற்றுடன் 100 கிராம் மஞ்சள் தூள் எடுத்துக்கொள்ளவும்.

தயாரிக்கும் முறை

சிறிய துண்டுகளாக இலைகளை வெட்டவும் (பில்வா பழம் அல்லது மிளகாய் பயன்படுத்தி நசுக்கவும்). மஞ்சள் தூள் சேர்க்கவும். முன்பு குறிப்பிட்ட நொதித்தல் முறை பயன்படுத்தி கலவையை தயாரிக்கவும். இந்த கலவையை 7 நாட்களுக்கு நொதிக்க விடவும்.

பயன்படுத்தும் முறை

ஒரு லிட்டர் கரைசலில் பத்து லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம். தாக்குதலின் தீவிரம் பொறுத்து, 7-10 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை மீண்டும் தெளிப்பு செய்யலாம்.

இவ்வாறு இயற்கை முறையில் நாம் தயாரிக்கும் இந்த ஆர்கானிக் உரங்கள் அல்லது பூச்சிக் கொள்ளிகள், பயிர்களுக்கு நல்ல சத்துகளையும் வழங்குகிறது. எனவே நாம் அறுவடை செய்யும் போதும் நல்ல ஊட்டச்சத்துள்ள பயிர்கள் மற்றும் காய்கறிகள் நமக்கு கிடைக்கின்றன.

முனைவர் மு .உமா மகேஸ்வரி,
(உதவி ஆசிரியர், உழவியல்),
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
பெரியகுளம்

மேலும் படிக்க...

copied:tamil.krishijagran.com

Friday, June 26, 2020

கால்நடைகளுக்கான கோடைக்கால பராமரிப்பு முறைகள்!!


கோடைக்காலத்தில் பொதுவாகவே கால்நடைகளுக்கு உயர்ந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக உடலின் உடற் செயலியல் மாற்றம் ஏற்பட்டு வெப்ப அயர்ச்சி ஏற்படுகிறது.

குறிப்பாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களில் வெப்ப அயர்ச்சியினால் கால்நடைகளில் உற்பத்தி திறன் மற்றும் செயல் திறன் வெகுவாக பாதிப்பு ஏற்பட்டு கால்நடைகளின் பொதுச் சுகாதாரம் மட்டுமல்லாமல் வேளாண் பெருமக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.


கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்

  • உஷ்ணம் காரணமாக கால்நடைகளில் இனப்பெருக்க திறன் பாதிக்கப்படும்

  • ஆடு மாடுகளில் பால் சுரக்கும் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும்

  • உட்புறசெயலியல் மாற்றம் ஏற்பட்டு செயல் திறன் வெகுவாக பாதிக்கப்படும்

  • வளர்சிதை மாற்ற நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்

  • கால்நடைகளில் நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்படும்.


தீவன பராமரிப்பு மற்றும் பொது மேலாண்மை யுக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியிலிருந்து பாதுகாக்க முடியும், மேலும் தீவன உட்கொள்ளும் திறன் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த முடியும்



கால்நடை பராமரிப்பு முறைகள்

  • பசுந்தீவனம் மற்றும் 35 சதவிகிதம் புரதச்சத்து நிறைந்த சமச்சீர் தீவனத்தினை காலை மற்றும் மாலை நேரங்களில் அளிக்கலாம்

  • பொட்டாசியம் நிறைந்த தாது உப்புகள் அளிப்பதன் மூலம் கறவை மாடுகளில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்க திறனையும் மேம்படுத்த முடியும்

  • வெயில் காலங்களில், ஒரு நாளில் 5-6 முறை சுத்தமான மற்றும் குளிர்ந்த நீரை வழங்கலாம்

  • குறைந்தபட்சம் 9 அடி உயரமுள்ள கொட்டகை அமைத்து கொட்டகையைச் சுற்றி தீவன மரங்களை வைக்கலாம்

  • 20% துளையிடும் வேளாண் வலைகளும் பயன்படுத்தலாம்

  • 10 முதல் 30 நிமிடங்கள் இடைவெளியில் 1 முதல் 5 நிமிடங்கள் வரை கால்நடைகளின் உடலில் நேரடியாகத் தண்ணீரை தெளிப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க முடியும்

  • காற்றோட்டமான கொட்டகைகளிலோ அல்லது பயனுள்ள மற்றும் ஆதாரம் தரும் மரங்களின் நிழல்களில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளைப் பராமரிக்கலாம்

  • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கவும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்

  • அடர்தீவனங்களை 20-30 நிமிடங்கள் சம அளவு தண்ணீரில் ஊறவைத்து அளிக்க வேண்டும

  • வெயில் காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் ஒட்டுண்ணி அதிகரித்து கால்நடைகளில் உண்ணிக் காய்ச்சல் ஏற்படுத்தும். எனவே , உண்ணி நீக்க மருந்தினை பயன்படுத்தி உண்ணி தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்

  • வெப்ப அயர்ச்சியினால் வளர்சிதை மாற்ற நோய்கள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் தாது உப்புகள் மற்றும் சினை மாடுகளில் சிறந்த தீவன மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

மருத்துவர் இரா. சங்கமேஸ்வரன் .
உதவிப் பேராசிரியர்,
கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி

 

add-17

add-15

<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?p...