Tuesday, June 30, 2020

ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்தையும் அள்ளித் தரும் வாடாமல்லி!


வாடி விடும் பூக்களுக்கு மத்தியில், எப்போது பார்த்தாலும் அப்போதுதான் மலர்ந்தது போல் வாடாமல் இருக்கும் பூ இந்த ''வாடாமல்லி''. இது வறட்சியான நிலத்தில் கூட வளரக் கூடிய ஒரு செடியாகும். இந்த செடிகள் மிகவும் குறைவாக உயரம் வரை மட்டுமே வளரும். வாடாமல்லி பூக்கள் எளிதாக சந்தைகளில் அன்றாடம் கிடைக்க கூடிய பூ வகைகளில் ஒன்றாகும்.

கோம்பிரினா குளோபோசா (Gomphrena globosa)என்பது இதன் தாவர பெயர் ஆகும். குளோப் அமராந்த் (Globe amaranth) என்ற பெயரும் இதற்கு உள்ளது.
ஊதா, வெள்ளை, சிவப்பு என பல நிறங்களில் பூக்கும் இயல்பு கொண்டது. என்றாலும் ஊதா நிற பூக்களே அதிக அளவில் வணிக ரீதியாக பயிரிடப்படுகிறது. வாடாமல்லி பூ மாலை கட்டவும், அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு அதி உன்னத மருத்துவ குணங்களும் கொண்டது.

வாடாமல்லி எப்படி பயிரிடுவது..? - (How to Cultivate)

வாடமல்லியை, ஆனி மாதம் (ஜூலை - July) பயிர் செய்ய ஏற்ற பருவம் ஆகும். தண்ணீர் தேங்காத செம்மண் வகைகள் சாகுபடிக்கு சிறந்தது. ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 10 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும். நிலத்தை நன்கு உழுது 3x10 செ.மீ அளவுள்ள பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்தியின் மேல் மக்கிய தொழுஉரம் இட வேண்டும். பின்பு விதைகளை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும். பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

நிலம் தயாரித்தல் ( How to prepare land)

நிலத்தை 3 முதல் 4 உழவுகள் வரை உழுது மண்ணை பன்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். 500 கிராம் அசோஸ்பைரில்லத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து நடுவதற்கு முன் நாற்றை நனைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். நிலத்தின் தன்மையை பொருத்து, தேவைப்படும் அளவிற்கு ஏற்ப பார்கள் அமைத்து 30, 35 நாள் வயதுடைய நாற்றை 2 அடிக்கு 1 அடி என்ற விகிதத்தில் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நாற்றை பார்களின் இருபுறமும் நடவு செய்யலாம்.


நீர் மேலாண்மை (Water Management)

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 5 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாசனம் செய்தால் போதுமானது. நடவு செய்த 20வது நாள் மற்றும் 40 நாட்களில் களை எடுக்க வேண்டும். வயலில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். களை எடுத்தப்பின் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 25 கிலோ கடலைப்புண்ணாக்கு கலந்து செடிகளின் அடிப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள் ( How to protect)

காஞ்சாரை நோய் தாக்கினால் செடியின் நுனி கருகி காணப்படும். அதேபோல் பூ கருகி காய்ந்து விடும். இதனை கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து பயிருக்கு தெளிக்க வேண்டும். நூற்புழு தாக்கினால் செடி மேலிருந்து கீழாக பட்டுக்கொண்டே வரும். இதனை கட்டுப்படுத்த நட்ட 40ம் நாள் அல்லது முதல் களையின் போது போரெட் அல்லது பியூரடான் குருணை மருந்துடன் டி.ஏ.பி அல்லது வேப்பம் புண்ணாக்கை சேர்த்து வயலில் தூவி விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை ( Harvesting)

பூக்கள் பூத்துக்குலுங்க ஆரம்பித்தவுடன், பூக்களின் தேவையைப் பொருத்து சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம்.

மருத்துவ பயன்கள் - (Medical benefits)

  • வாடாமல்லி பூக்களை பயன்படுத்தி சளி, இருமல், ஆஸ்துமாவுக்கான மருந்தை தயாரிக்கப்படுகிறது.

  • வாடாமல்லியை அரைத்து அதன் விழுது ஒரு கப், தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து சருமத்தில் பூசினால், சருமமானது மிருதுவாகும்.

  • தோலின் கரிய நிறம் மாற்றம் அடையும். நுண் கிருமிகளை அழிக்கக் கூடிய தன்மை இந்த மலருக்கு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக வாடாமல்லி விளங்குவதால், உடலின் அனைத்து உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கும் தன்மை உடையதாக விளங்குகிறது.

  • பீட்டா சயனீஸ், ஆல்பா சயனீஸ் என்று சொல்லக் கூடிய வேதிப்பொருட்கள் வாடாமல்லியில் காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு வேதிப் பொருட்கள் காரணமாக வாடாமல்லி ஆன்டி பயாட்டிக்காக செயல்படுகிறது. இதனால் இருமலை தடுக்கக் கூடியதாகவும், காய்ச்சலை தணிக்கக் கூடியதாக வாடாமல்லி வேலை செய்கிறது.

  • குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வெற்றிலையில் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒன்றின் மீது ஒன்று அடுக்காக வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வைப்பதால் சில நாட்களில் வலி மற்றும் வீக்கம் சரியாகும்.

  • வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி ஆறவைத்து கண்களை கழுவினால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பு சரியாகும். இதன் இலை மற்றும் பூக்களைப் பயன்படுத்தி சேற்று புண்கள், கொப்புளங்களை எளிதில் குணமாக்கலாம்.

copied:tamil.krishijagran.com/

Sunday, June 28, 2020

ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி!!


கீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்பது இல்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கூட கீரை சாகுபடி செய்யலாம். இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. கிணற்று தண்ணீர் கொண்டு கூட நாம் கீரையைப் பயிடலாம்.

பொன்னாங்கண்ணி சாகுபடி முறை 

சிறிய வடிவிலான இலைகளைக் கொண்ட பொன்னாங்கண்ணிக் கீரை தரையோடு படர்ந்து வளரும்.

பொன்னாங்கண்ணி கீரையானது இந்தியா முழுவதும் காணப்படும் படர் பூண்டு வகையைச் சேர்ந்தது. இதனை அறுத்துவிட்டால்,மீண்டும் மீணடும் துளிர்க்கும் தன்மையே இதன் சிறப்பு. எனவே வீட்டில் எளிதாக இதனை வளர்க்க முடிகிறது.

வகைகள்

சீமை பொன்னாங்கண்ணி
நாட்டுப் பொன்னாங்கண்ணி

பயிர் செய்ய ஏற்ற பருவம்

இதனை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். எனினும், சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகியவை ஏற்ற பருவங்கள் ஆகும்.  

மண்

நல்ல மண்ணுடன் மணல் கலந்து சிறிது அமிலத்தன்மை கொண்ட இருமண் நிலம், செம்மண் நிலம் ஆகியவை பொன்னாங்கண்ணி கீரை சாகுபடிக்கு உகந்தவை.

நிலம் தயாரித்தல்

முதலில் நிலத்தை இரண்டு மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பின்னர் நிலத்திற்கு தேவையான உரத்தை பரவலாகக் கொட்டி உழவு செய்து நிலத்தைப் பயன்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவுக்கு பாத்திகள் அமைப்பது நல்லவது



விதைத்தல்

விதைகள் சிறியதாக இருப்பதால், அதனுடன் மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். பின்னர் கையால் கிளறி மெல்லிய போர்வை போல் அமைத்து பாசனம் செய்ய வேண்டும்.

தண்ணீர்

விதைகள் விதைத்தவுடன் நீர் பாய்ச்சுவது சிறந்தது. விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். பின்னர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்

மாதத்திற்கு இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கரைசல் போதுமானது. இதனால், கீரைகளின் வளர்ச்சி ஒரே மாதிரி சீராக இருக்கும்.

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்!!

பாதுகாக்கும் முறைகள்

களைகளைக் களைதல்

விதைத்த ஏழு நாட்களிலேயே விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். எனவே பத்து முதல் பதினைந்து நாட்கள் கழித்து, களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, அதிகப்படியான பயிர்களை களை எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

பூச்சி தாக்குதல்

பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட்டால், அதில் இருந்து கீரைச் செடிகளைக் காப்பாற்ற, நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றரையும், சம்மாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டு சிறுநீரில், கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின்னர், பத்து லிட்டர், தண்ணீருக்கு 300 மில்லி லிட்டர் கரைசல் என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

பொன்னாங்கண்ணிக் கீரையை 5 சென்டி மீட்டர் உயரம் வரை வளரவிட்டு அறுவடை செய்வது சிறந்தது. அறுவடைக்கு குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்ல மகசூலைத் தரும்.



நன்மைகள்

பொன்னாங்கண்ணி கீரையில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சுத்துக்கள் மற்றும் வைட்டமின் சி (Vitamin C ) நிறைந்திருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தர வல்லது.
கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்ற கண்நோய்களைக் குணமாக்கும் வல்லமை படைத்தது. பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து ஒருவாரம் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாகத் தெரியும்.
இந்த கீரையுடன் மிளகும், உப்பும் கலந்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

வேளாண் நிலங்களில் மரங்கள் நடும்போது கவனிக்க வேண்டியவை!!

இதில் கால்சியம் அதிகளவில் இருப்பதால், எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்ந்து வதக்கி தொடர்ச்சியாக சாப்பிட்ட வந்தால், மூல நோய் படிப்படியாக குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தைலமாகப் பயன்படுத்தினால் கூந்தல் நன்றாக வளரும். இவ்வளவு நன்மை தரும் பொன்னாங்கண்ணிக் கீரையை நாமும் உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

பயிர்களில் பூச்சி தாக்குதலா? ஆர்கானிக் உரங்களை பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம்!


வளர்ந்து வரும் பயிர், செடி, கொடிகளில் பூச்சித் தாக்குதல் என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்தாமல் ஆர்கானிக் உரங்களை (வீட்டுத் தயாரிப்பு உரங்களை) பயன்படுத்தி பூச்சித் தாக்குதல்களில் இருந்து விரைவில் பயிர்களை காப்பற்றலாம் என்கிறார் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முனைவர் மு .உமா மகேஸ்வரி.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் பயிர், செடி, கொடி, மரங்கள் ஆகியவை வளர்கின்றன. பயிர்களை நோய் தாக்காமல் இருக்கவும், பூச்சி தாக்குதல் மற்றும் அதிக விளைச்சல் போன்றவற்றிற்காக நாம் ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இதனால் நல்ல ஊட்டச்சத்துள்ள பயிர் மற்றும் காய்கறிகளை மறந்து வருகிறோம்.

ஆர்கானிக் உரங்களை (இயற்கை கரிம உரங்கள்) பயன்படுத்துவதன் மூலம், பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து விரைவில் காக்க முடியும் என்றும் பயிர் செடி கொடிகளை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்த்தெடுக்க முடியும் என்கிறார் முனைவர் உமா மகேஷ்வரி. அவருடை சில ஆர்கானிக் உரங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.

பிரம்மாஸ்திரம்

தேவையான பொருட்கள்

10 லிட்டர் கோமியம் , 5 கிலோ அரைத்த வேப்பிலை, அரைத்த சீதா, பப்பாளி, மாதுளை, கொய்யா இலைகள் தலா 2 கிலோ என அனைத்தையும் கலந்து நன்கு கொதிக்க விட்டால், கிடைக்கும் கரைசலே பிரம்மாஸ்திரம் ஆகும்.

பயன்படுத்தும் முறை

ஒரு நாள் கழித்து வடிகட்டி, 2 – 2.5 லி பிரம்மாஸ்திரத்தை, 100 லி நீரில் கலந்து தெளித்தால், அனைத்து பூச்சிகளும் குறையும்.


அரப்பு - மோர் கரைசல்

தேவையான பொருட்கள்

4 லிட்டர் மோர் , ஒரு லிட்டர் இளநீர் , 250 கிராம் பப்பாளி பழ கூழ், 100 கிராம் மஞ்சள் தூள், 10 முதல் 50 கிராம் பெருங்காயம் தூள் ஆகியவற்றைக் கலந்து கரைசலாக்கிக் கொள்ளவும். அவற்றுடன் வேம்பு, துளசி, அரப்பு, சீதாப்பழம், நொச்சி, கற்றாழை மற்றும் புதினா இலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கலந்து விடவும். இதனை 7 நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

அரப்பு (மற்றொரு முறை)

தேவையான பொருட்கள்

வேம்பு, புங்கம், அல்லது மலை வேம்பு 1-2 கிலோ, சீதாப்பழம் அல்லது தங்க அரளி 200-250 கிராம், எட்டி100-250 கிராம், கடுக்காய் சுண்டக்காய் 1-2- கிலோ, பச்சை மிளகாய் 500-1000 கிராம், வில்வம் பழம் 5-10 எண்ணிக்கை, அல்லது ஊமத்தை பழம் 10-20 எண்ணிக்கை.

தயாரிக்கும் முறை

மேலே பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து ஒரு கரைசலை உருவாக்க வேண்டும். 12 மணி நேரம் அந்த கரைசலை நொதிக்க விட வேண்டும்.

பயன்படுத்தும் முறை

ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.


புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தேவையான பொருட்கள்

வேம்பு, புங்கம், அல்லது மலை வேம்பு 1-2 கிலோ அல்லது 250-500 கிராம், சீதாப்பழ அல்லது தங்க அரளி 200-250 கிராம், எட்டி100-250 கிராம், கடுக்காய் சுண்டக்காய் 1-2- கிலோ, பச்சை மிளகாய் 500-1000 கிராம், வில்வம் பழம் 5-10 எண்ணிக்கை, அல்லது ஊமத்தை பழம் 10-20 எண்ணிக்கை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தயாரிக்கும் முறை

இந்த பொருட்களை ஒன்றாகக் கலந்து ஒரு கரைசலை உருவாக்க வேண்டும். 12 மணி நேரம் இக்கரைசலை நொதிக்க விட வேண்டும். பின்பு அது பசை போல் மாறிவிடும்.

பயன்படுத்தும் முறை

1 கிலோ பசையை 100-125 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பு செய்யலாம். இவ்வாறு உபயோகிப்பதின் மூலம் இயற்கையாக கம்பளிப்பூச்சி புழுக்கள், இலைச்சுருள் புழு, தண்டு துளைப்பான் ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை

இந்த பிரச்சனை பொதுவாக மிளகாய், காய்கறிகள் மற்றும் பருத்தியில் ஏற்படுகிறது. பூச்சிகள் எல்லாம் இலைகள் மற்றும் கிளைகளை தாக்குகிறது. இந்த தாக்குதலின் விளைவாக இலைகள் சுருண்டு கொட்டத் துவங்கி விடும். பின்வரும் ஆர்கானிக் உரம் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்

லண்டானா காமரா, வேம்பு, நொச்சி, புகையிலை மற்றும் சிரியாநங்கை இலைகளில் 2-3 கிலோ எடுத்துக்கொள்ளவும். சீதாப்பழம், கற்றாழை, பிரண்டை அல்லது வில்வம் பழம் (5 -10) அல்லது பச்சை மிளகாய் (2 -3 கிலோ) இவற்றுடன் 100 கிராம் மஞ்சள் தூள் எடுத்துக்கொள்ளவும்.

தயாரிக்கும் முறை

சிறிய துண்டுகளாக இலைகளை வெட்டவும் (பில்வா பழம் அல்லது மிளகாய் பயன்படுத்தி நசுக்கவும்). மஞ்சள் தூள் சேர்க்கவும். முன்பு குறிப்பிட்ட நொதித்தல் முறை பயன்படுத்தி கலவையை தயாரிக்கவும். இந்த கலவையை 7 நாட்களுக்கு நொதிக்க விடவும்.

பயன்படுத்தும் முறை

ஒரு லிட்டர் கரைசலில் பத்து லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம். தாக்குதலின் தீவிரம் பொறுத்து, 7-10 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை மீண்டும் தெளிப்பு செய்யலாம்.

இவ்வாறு இயற்கை முறையில் நாம் தயாரிக்கும் இந்த ஆர்கானிக் உரங்கள் அல்லது பூச்சிக் கொள்ளிகள், பயிர்களுக்கு நல்ல சத்துகளையும் வழங்குகிறது. எனவே நாம் அறுவடை செய்யும் போதும் நல்ல ஊட்டச்சத்துள்ள பயிர்கள் மற்றும் காய்கறிகள் நமக்கு கிடைக்கின்றன.

முனைவர் மு .உமா மகேஸ்வரி,
(உதவி ஆசிரியர், உழவியல்),
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
பெரியகுளம்

மேலும் படிக்க...

copied:tamil.krishijagran.com

Friday, June 26, 2020

கால்நடைகளுக்கான கோடைக்கால பராமரிப்பு முறைகள்!!


கோடைக்காலத்தில் பொதுவாகவே கால்நடைகளுக்கு உயர்ந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக உடலின் உடற் செயலியல் மாற்றம் ஏற்பட்டு வெப்ப அயர்ச்சி ஏற்படுகிறது.

குறிப்பாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களில் வெப்ப அயர்ச்சியினால் கால்நடைகளில் உற்பத்தி திறன் மற்றும் செயல் திறன் வெகுவாக பாதிப்பு ஏற்பட்டு கால்நடைகளின் பொதுச் சுகாதாரம் மட்டுமல்லாமல் வேளாண் பெருமக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.


கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்

  • உஷ்ணம் காரணமாக கால்நடைகளில் இனப்பெருக்க திறன் பாதிக்கப்படும்

  • ஆடு மாடுகளில் பால் சுரக்கும் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும்

  • உட்புறசெயலியல் மாற்றம் ஏற்பட்டு செயல் திறன் வெகுவாக பாதிக்கப்படும்

  • வளர்சிதை மாற்ற நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்

  • கால்நடைகளில் நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்படும்.


தீவன பராமரிப்பு மற்றும் பொது மேலாண்மை யுக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியிலிருந்து பாதுகாக்க முடியும், மேலும் தீவன உட்கொள்ளும் திறன் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த முடியும்



கால்நடை பராமரிப்பு முறைகள்

  • பசுந்தீவனம் மற்றும் 35 சதவிகிதம் புரதச்சத்து நிறைந்த சமச்சீர் தீவனத்தினை காலை மற்றும் மாலை நேரங்களில் அளிக்கலாம்

  • பொட்டாசியம் நிறைந்த தாது உப்புகள் அளிப்பதன் மூலம் கறவை மாடுகளில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்க திறனையும் மேம்படுத்த முடியும்

  • வெயில் காலங்களில், ஒரு நாளில் 5-6 முறை சுத்தமான மற்றும் குளிர்ந்த நீரை வழங்கலாம்

  • குறைந்தபட்சம் 9 அடி உயரமுள்ள கொட்டகை அமைத்து கொட்டகையைச் சுற்றி தீவன மரங்களை வைக்கலாம்

  • 20% துளையிடும் வேளாண் வலைகளும் பயன்படுத்தலாம்

  • 10 முதல் 30 நிமிடங்கள் இடைவெளியில் 1 முதல் 5 நிமிடங்கள் வரை கால்நடைகளின் உடலில் நேரடியாகத் தண்ணீரை தெளிப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க முடியும்

  • காற்றோட்டமான கொட்டகைகளிலோ அல்லது பயனுள்ள மற்றும் ஆதாரம் தரும் மரங்களின் நிழல்களில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளைப் பராமரிக்கலாம்

  • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கவும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்

  • அடர்தீவனங்களை 20-30 நிமிடங்கள் சம அளவு தண்ணீரில் ஊறவைத்து அளிக்க வேண்டும

  • வெயில் காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் ஒட்டுண்ணி அதிகரித்து கால்நடைகளில் உண்ணிக் காய்ச்சல் ஏற்படுத்தும். எனவே , உண்ணி நீக்க மருந்தினை பயன்படுத்தி உண்ணி தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்

  • வெப்ப அயர்ச்சியினால் வளர்சிதை மாற்ற நோய்கள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் தாது உப்புகள் மற்றும் சினை மாடுகளில் சிறந்த தீவன மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

மருத்துவர் இரா. சங்கமேஸ்வரன் .
உதவிப் பேராசிரியர்,
கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி

 

add-17

Thursday, June 18, 2020

இயற்கை-விவசாயம்-செய்வது/

இயற்கை முறையில் விவசாயம் செலவின்றி விவசாயம் செய்வது. தமிழகத்தில் இந்த பழைய முறை புதிய மாற்றத்தை அளித்துவருவது மகிழ்ச்சியான விஷயம். நானும் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் 24 ஏக்கரில் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன்” என்கிறார் மதுரை வாடிப்பட்டி திருவாலவாய நல்லூரைச் சேர்ந்த விவசாயி பார்த்தசாரதி.இயற்கை விவசாய அனுபவங்களை கூறியதாவது: 8 ஏக்கரில் நெல், 2 ஏக்கரில் காய்கறி, 7 ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது. இரண்டு கிணறு, 2 போர்வெல் மூலம் தண்ணீர் வசதியும் உள்ளது. 7 ஏக்கரில் 600 தென்னை மரங்கள் உள்ளன. 60 நாட்களுக்கு ஒரு முறை 8,000 தேங்காய்கள் எடுக்கின்றேன். நான்காண்டுகளாக சரியான மழையில்லாததால் தென்னைகளை காப்பாற்றுவதே கஷ்டம். அந்த சூழ்நிலையில் இந்த விளைச்சல் போதும் தான். கடுமையான வறட்சியை தாங்கியதற்கு ஒரே காரணம் மூடாக்கு முறையே. தென்னை மட்டைகளை மரங்களுக்கு கீழே மூடுவதால் வெயிலிலும் நிலம் குளிர்ச்சியாக இருக்கும். நிலத்தின் தன்மை மற்றும் வீரியத்தை குறையாமல் பாதுகாக்க மாற்றுப்பயிர் செய்ய வேண்டும். 2 ஏக்கர் நிலங்களாக வேறு வேறு இடங்களை தேர்ந்தெடுத்து புடலை, கத்தரி, தக்காளி, வெண்டைக்காய் சாகுபடி செய்கிறேன். கால்நடை தீவனங்களான கோ4, வேலிமசால் வளர்க்கிறேன். இயற்கை காய்கறிகள் என்பதால் மதுரையில் இயற்கை அங்காடி அமைத்து விற்பனை செய்கிறேன். இயற்கை விவசாயிகளும் இங்கு வந்து காய்கறிகளை கொடுக்கின்றனர். என்னுடைய நிலத்தில் 8 ஏக்கரில் ஏடிடி45, நாட்டு நெல் கவுனி, சீரகச் சம்பா நெல் ரகங்களை பயிருட்டுள்ளேன். தற்போதைய விலை நிலவரப்படி ஏடிடி45 ரூ.60 முதல் ரூ.70 வரையும், கவுனி ரூ.150, சீரகசம்பா ரூ.100க்கும் விற்பனை ஆகிறது. வறட்சியை தாங்கும் நெல்ரகங்கள் என்பதால் காய்ச்சலும், பாய்ச்சலுமாக வாரம் ஒருமுறை தண்ணீர் விடுகிறேன். ஜீரோ பட்ஜெட் விவசாயத்திற்கு இயற்கை உரம் தான் முக்கியம். 10 மாடுகள் மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை இயற்கையாக தயார் செய்கிறேன். ஜீவாமிர்த கரைசலை வாரம் ஒருமுறை தண்ணீரில் கலந்து தெளிக்கிறேன். இதனால் நெல்லுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சீராக சென்றடைகிறது. இதனால் களைகள் வளரவே இல்லை, எந்தநோயும் நெற்கதிர்களை தாக்கவில்லை. நெல்லாக விற்பனை செய்வதில்லை. அரிசியாக மாற்றி மொத்தமாகவும், சில்லரையாகவும் கொடுக்கின்றேன். நம்பிக்கையுடன் சரியான முறையில் கையாண்டால் விளைச்சல் பாதிக்காது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்கத் தேவையும் இல்லை. அதற்கான செலவும் இல்லை. இதற்கு விவசாயிகள் செய்யக்கூடிய ஒரே வேலை, மாடுகள் வளர்ப்பது தான். ரசாயன உரத்தில் இருந்து விடுபட நினைத்தால் நிலத்தை ஆறு முறைக்கு குறையாமல் நன்றாக உழ வேண்டும். இயற்கை குப்பைகள் கலந்த புதிய மண்ணைக் கலந்து உழுத பிறகு 15 நாட்களுக்கு ஆறவிட வேண்டும். ஒரு விதை, இரு விதை, காய்கறிகளின் விதைகளை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் அவற்றை மடக்கி உழ வேண்டும். இதனால் மண்ணுக்கு தேவையான இயற்கை சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். ரசாயன உரத்தின் வீரியம் குறைந்துவிடும். இரு ஆண்டுகளில் நிலத்தின் தன்மை மாறி மீண்டும் பழைய மகசூல் இயற்கை முறையில் கிடைக்கும் என்கிறார் பார்த்தசாரதி. இவரின் தொடர்புக்கு 09942506253 ——————————————— இயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் , மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் 2016 மார்ச் 29ஆம் தேதி இயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற உள்ளது கலந்து கொள்ளும் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளவும் ——————————————————- இயற்கை வேளாண்மையின் மறைக்கப்பட்ட வெற்றிக் கதைகள் மத்திய வேளாண் அமைச்சராகச் சரத்பவார் இருந்தபோது இயற்கைவழி வேளாண்மை எனப்படும் வளர்ந்துவரும் துறை பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் பயனாகவே, ‘Ecological Agriculture in India scientific evidence on positive impacts and successes’ நூலில் உள்ள ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. இது தொடர்பாக மேலும் சில விவரங்களைப் பார்ப்போம். வெளிவந்த உண்மைகள் உண்மையில் மக்களை நேசிக்கும் அல்லது மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் நமது அரசாங்கத்தின் அறிவியல் சமூகம், தானாகவே முன்வந்து, இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில், அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில், அவர்களுடைய மேற்பார்வையில் செய்யப்பட்டவை. இந்த ஆராய்ச்சிகளில் மண் வளம் கூடியுள்ளது, நீர்ச் செலவு குறைந்துள்ளது, மின்சாரம் போன்ற ஆற்றல் செலவினங்கள் குறைந்துள்ளன, பல இயற்கைப் பூச்சிகள் பெருகியுள்ளன, உயிரியல் பன்மயம் மிகுந்துள்ளது, நச்சுத்தன்மை குறைந்துள்ளது, பருவநிலைகளுக்குத் தாக்குப்பிடிக்கும் திறன் கூடியுள்ளது போன்றவை எல்லாமே தெரியவந்துள்ளது. இவற்றை எல்லாம்விட முக்கியமானது ஐந்து முதல் 20 சதவீதம்வரை விளைச்சல் அதிகமாகியுள்ளது. இப்படி இயற்கை வேளாண்மை பற்றி கிடைத்துள்ள சாதகமான ஆராய்ச்சி முடிவுகளைக் கிடப்பில் போட வேண்டிய அவசியம் என்ன? நாடு முழுவதும் வெளிப்படுத்தப்படாத இந்த முடிவுகளை வெளிப்படுத்தும் மேற்கண்ட நூல், ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் விளைச்சலில் நடந்த முன்னேற்றங்களை எடுத்துரைக்கிறது, சாகுபடி நடைமுறைகளில் உள்ள கூறுகளை மதிப்பிடுகிறது, சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன என்று பட்டியல் இடுகிறது, சமூகப் பொருளியல் தரவுகளை விளக்குகிறது, எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் கூறுகிறது. இது தவிர விரிவான புள்ளிவிவரங்களுடன், போதிய தகவல்களைத் திரட்டி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நெல், கோதுமை, மக்காச் சோளம், உருளைக் கிழங்கு போன்ற ரசாயன உரங்களை மட்டுமே நம்பி வாழும் பயிர்களில்கூட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இவை தவிரப் பயறுகள், எண்ணெய் வித்துகள் என்று 28 பயிர்களில், 13 இடங்களில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்படாத அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன (உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் தொடங்கித் தமிழகம்வரை 13 இடங்களில் இந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன). விளைச்சல் அதிகரிப்பு எடுத்துக்காட்டாக, மஞ்சள் பயிரில் 51.5 சதவீதம் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது, மக்காச் சோளத்தில் 22.8 சதவீதம், நெல்லில் 2 சதவீதம் என்று பல பயிர்களிலும் விளைச்சல் அதிகரிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதைவிட இந்த ஆராய்ச்சிகளில் பல உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி இதழ்களில் வெளிவந்துள்ள முடிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆராய்ச்சிகள் குறிப்பிட்ட ஒரு வழிமுறையை மட்டும் பின்பற்றிச் செய்யப் படவில்லை, உயிரித்துணைமப் பண்ணையம், உயிர்ம வேளாண்மை, இயற்கை வேளாண்மை என்ற பல சிந்தனைப் பள்ளிகளில் இருந்தும் நுட்பங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பொதுப்படையாக ரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத வேளாண் முறைகளைப் பின்பற்றும்போது ஏற்படும் விளைவுகள் பற்றியே ஆராய்ச்சிகள் பெரிதும் உள்ளன. புதிய செய்திகள் அதுமட்டுமல்லாது, இயற்கை வேளாண்மை என்பது வெறும் பாரம்பரிய வேளாண்மைதான் என்ற பார்வையில் இருந்து மாறி இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுடனும், இன்றைய அறிவியல் அணுகுமுறையுடனும் கூடியதாகவே இயற்கைவழி வேளாண்மை உள்ளது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. உழவர்கள் செய்து பார்க்க வாய்ப்பு இல்லாத, அதேநேரம் மிகவும் பயன் தரக்கூடிய, எந்த இயற்கை வேளாண்மை இடுபொருளை இட்டால், என்ன விளைவு கிடைக்கும் என்பது போன்ற நுட்பமான செய்திகளையும் இந்த ஆய்வுத் தாள்கள் அளிக்கின்றன. இது நம்முடைய உழவர் பெருமக்களுக்கும் பயன்படும். பயிர்ச் சுழற்சி (Crop rotation), பயறு வகைத் தாவரங்களைப் பயன்படுத்துதல் (Legume crops), வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்துவது, மட்கிய தொழுவுரப் பயன்பாடு, மூடாக்கு, உயிர் உரங்கள், உயிரியல் நுண்ணுயிர் பயன்பாடு என்று மரபு முறைகளும், ஒரு சில புதிய நுட்பங்களும் இந்த ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், இன்றைக்கு மிகவும் முன்னேறியுள்ள பல இயற்கை நுட்பங்கள் இந்த ஆராய்ச்சிகளில் இல்லை. அப்படியிருந்தும்கூட விளைச்சல் தொடங்கிப் பல்வேறு கூறுகளில் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளது ஆச்சரியகரமானதுதான். இந்திய அரசு இயற்கை வழி வேளாண்மைக்கு ஆண்டுக்கு ரூ. 100 கோடி ரூபாய்கூட ஒதுக்குவது இல்லை. அதேநேரம், ரசாயன உரத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் மானியம் வழங்குகிறது. ஆனாலும்கூட ஏராளமான ஆராய்ச்சிகள், ஒரு பக்கச் சார்பாகவே நடைபெறுகின்றன!! copied:https://tamilthagaval.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/ மேலும் விவரங்களுக்கு 04285241626

Wednesday, June 17, 2020

add-10

வீட்டைச் சுற்றி காலியிடம் உள்ளதா..? வீட்டை சுற்றி பசுமை தோட்டம் அமையுங்கள்

செங்கற்களாலான கட்டிடத்தை மட்டும் குறிப்பதல்ல. உயிர்கள் அதில் வாழ்வதாலேயே அதற்கு மதிப்பு. மனிதர்கள் இல்லாத வீடுகள் வெறும் கட்டிடங்கள் மட்டுமே! மரங்கள் இல்லாத வீட்டின் முற்றமும் அதுபோலத்தான்! வீடு கட்டும் எண்ணம் உள்ள ஒவ்வொருவரும் இங்கே சொல்லும் செய்தியை சற்று கவனித்தல் நலம்!
எப்படியாவது ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பதே இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தாரின் உச்சபட்ச இலக்காக உள்ளது. அப்படி அடித்துப் பிடித்துக் கட்டப்படும் வீடுகள் ஆரோக்கியமாக உள்ளதா என்றால், பெரும்பான்மையான வீடுகளின் சூழல் ஆரோக்கியமாக இல்லை என்பதே உண்மை. காற்றோட்டமாக, சூரிய வெளிச்சம் வரக்கூடியதாக, இட வசதியுடன் கூடியதாக இருக்க வேண்டுமென்பது வீடுகட்டும்போது கவனிக்கப்பட வேண்டிய பொதுவான ஆரோக்கிய விதிகள். அதையும் தாண்டி கவனிக்க வேண்டியது வீட்டைச் சுற்றி இருக்க வேண்டிய காலி இடம்.
எதற்கு இந்த காலி இடம்?!
வீடு கட்டவே இடம் இல்லை, இதில் எங்கே காலி இடத்தை விடுவது என இடைமறிக்கும் குரல்களைக் கேட்க முடிகிறது. வீட்டைச் சுற்றி விடப்படும் காலி இடங்கள் நாம் புழங்குவதற்காக அல்ல, இயற்கையின் புழக்கத்திற்காக. ஆம்! நம் வீட்டைச் சுற்றி இயற்கையை அனுமதித்தால் அதன் பிரதிபலனாய் ஆரோக்கியமும் வாசலில் காத்திருக்கும்.
நாம் வீடு கட்டுவதற்கு இடம் வாங்கும்போதே வீட்டுத் தோட்டத்திற்கும் மரங்கள் நடுவதற்கும் சேர்த்து திட்டமிட்டு இடத்தை வாங்குவது சிறந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க நினைப்பவர்கள், அங்கே குடியிருப்பைச் சுற்றிலும் காலி இடம் உள்ளதா, தோட்டக் கலை போன்ற அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் கவனித்து வாங்கலாம்.
பொதுவாக தமிழ் நாட்டில் வீடுகட்டும்போது, சமையலறையின் அளவு, கூடத்தின் விஸ்தாரம், படுக்கையறைச் சுவரின் வண்ணம் இதுபோன்ற விஷயங்களைக் கவனிக்கும் அளவிற்கு வீட்டைச் சுற்றி அமைக்கப்படும் தோட்டத்திற்கும் மரக்கன்றுகளுக்கும் அலங்காரச் செடி வகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. “என்னது… செடி வைக்கணுமா?! அதெல்லாம் கடைசியில இடமிருந்தா பாத்துக்கலாம்ப்பா!” என்பது போன்ற இரண்டாம் பட்சமான மனப்பான்மையே இங்கே அதிகம்.
கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் வீட்டைச் சுற்றி அமைக்கப்படும் தோட்டமும் மரங்களும் முதன்மையான விஷயமாக பார்க்கப்படுகிறது. அங்கே வீட்டைச் சுற்றி பசுமைச் சூழல் இல்லாமல் உள்ள வீட்டினை பார்ப்பதென்பது அரிது. தமிழகத்தில் இனி வீடு கட்டப் போகும் ஒவ்வொருவரும் வீட்டைச் சுற்றி பசுமைச் சூழல் அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். காலையில் எழும் நாம் கண்விழித்ததும் அழகான தொட்டிச் செடிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை பார்த்தால், அந்த நாள் நிச்சயம் ஒரு வண்ணமயமான நாளாகத் தான் இருக்கும். வீட்டுத் தோட்டத்தினாலும் மரக்கன்றுகள் நடுவதாலும் நமது மனம் புத்துணர்ச்சி கொள்வதோடு, புவி வெப்பமயமாதலால் தகிக்கும் பூமியின் சூடும் சற்று குறையும்.

உங்கள் வீட்டை அழகாக்க காத்திருக்கும் ஈஷா பசுமைக் கரங்கள்!
உங்கள் வீட்டைச் சுற்றிலும் வைப்பதற்கான அலங்காரச் மரக்கன்றுகளை ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப் பண்ணைகளிலிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தோட்டக் கலை அமைப்பதற்கு தகுந்த ஆலோசனைகளையும் வல்லுநர்கள் வழங்குவார்கள்.
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062

Wednesday, June 3, 2020

மாம்பழம் (Mango)

மாம்பழம் (Mango)

Mango Tree

மாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும், கி மு 4000 ஆண்டிலேயே மாம்பழங்கள் அதிக அளவு பயன்படுத்தி இருக்கிறார்கள். தெற்கு ஆசியாவில் தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. உலக மொத்த உற்பத்தியில் 63 சதவிகிதம் இந்தியாவில் இருந்து தான் உற்பத்தியாகின்றது.

ரகங்கள்:

இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்களில் நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, சிந்து, அல்போன்சா, மல்கோவா ஆகிய ரகங்கள் மிகவும் பிரபலமானவை.

பயிரிடும் முறை :
  • ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும். நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் நிலம் மாம்பழ உற்பத்திக்கு ஏற்ற மண் ஆகும். மண்ணின் கார அமில தன்மை 6 – 8 வரை இருக்க வேண்டும்.
  • பயிரிடும் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பின்பு ஒவ்வொரு செடிக்கும் 8 முதல் 10 மீட்டர் இடைவெளி இருக்குமாறு மூன்று அடி ஆழமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழு உரம் இட்டு குழிகளை நன்கு ஆறவிட்டு வேண்டும்.
  • பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட செடிகளை குழிகளின் மத்தியில் வைத்து நடவு செய்ய வேண்டும். அக்குழியை மண்ணை கொண்டு நிரப்ப வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட கன்றுகளை உடனே நடாமல் பயிர் செய்யப்போகும் நிலத்தின் மண்ணை அச்செடிகளின் வேர்பகுதிகளில் வைத்து புதிய தளிர்களை வரவைத்து பின் நடுவதினால் செடிகளின் இறப்பு விகிதத்தை அதிகப்படியாக குறைக்கலாம். இவ்வாறு செய்வதினால் கன்றுகள் பட்டுபோகாமல் தடுக்கலாம்.
  • கன்றுகளை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். இளங்கன்றுகள் மண்ணில் வேர் பிடிக்கும் வரை அடிக்கடி நீர் பாய்ச்சுவது நல்லது.
  • அதேநேரத்தில் தண்டுப்பகுதியில் அதிக அளவிலான நீர் தேக்கத்தை தடுக்க வேண்டும்.
  • சொட்டுநீர் பாசனத்தை உபயோகிப்பதினால் செடிகள் ஈரப்பதத்தோடு வளருவதுடன் நீர் வீணாவத்தையும் தடுக்கலாம்.
  • அடிக்கடி தொழுவுரம் மற்றும் தழைசத்துக்களை வைப்பதினால் நல்ல வளர்ச்சியும் நல்ல மகசூலும் கிடைக்கும்.
Mango Tree
Cultivation Of Mango, Mango Tree
மாம்பழத்தின் பயன்கள்:
  • மாம்பலத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கும் பயன்படுகிறது.
  • தோல் பளபளக்க மாம்பழத்தை தொடர்ந்து உண்ண வேண்டும்.
  • தோல்வறட்சியை தடுக்கவும் தோல் பளபளக்கவும் மாம்பழ துண்டுகளை கொண்டு அந்த இடத்தில தேய்க்கவும்.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

copied:https://agriculturetrip.com/

தர்பூசணி (Watermelon)

தர்பூசணி (Watermelon)

Water Melon

ஈரான், துருக்கி, ரஷ்யா, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவு பயிர்ப்பட்டு வந்த தர்பூசணி இப்பொழுது உலகின் பெரும்பாலான நாடுகளில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் தர்பூசணி உற்பத்தி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியது.

உடலில் உள்ள உஷ்ணத்தை போக்கி நீர்ச்சத்தை அதிகரிக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு. இப்பொழுதும் வெயிற் காலங்களில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயிரிடும் முறை:
  • ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தர்பூசணி உற்பத்திக்கு சிறந்த காலங்கள் ஆகும்.
  • நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் தர்பூசணி சாகுபடிக்கு சிறந்த நிலமாகும். மண்ணின் கார அமில தன்மை 6 .5 முதல் 7 .5 வரை இருந்தால் அந்த மண்ணில் நல்ல உற்பத்தி கிடைக்கும்.
  • பயிரிடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தை நன்கு உழுது சமன்படுத்த வேண்டும். அதில் நான்கு அடி இடைவெளிகளில் 1 அடி ஆழமும் 1 அடி அகலமும் 1 அடி நீளமும் உடைய குழிகளை எடுக்க வேண்டும்.
  • அக்குழிகளில் ஒவ்வொரு குழிக்கும் 1 கிலோ ஆட்டு உரம், 2 கிலோ மண்புழு உரம் மற்றும் கால் கிலோ வெப்பம் புண்ணாக்கு போட்டு மேல் மண்ணை கிளறி விட்டு குழியை மூட வேண்டும். பத்து நாட்கள் வரை வரை ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு தயார் செய்யப்பட்ட குழிகளில் பத்து நாட்கள் கழித்து தேர்வு செய்யப்பட்ட விதைகளை குழிக்கு நான்கு விதைகள் வீதம் நட வேண்டும்.
  • ஒரு ஏக்கர் நிலத்திற்கு 500 கிராம் விதைகளை பயன்படுத்தலாம்.
  • பின்பு 1 வாரம் கழித்து நட்ட நான்கு விதைகளில் நன்றாக வளர்ந்த இரண்டு செடிகளை விட்டு விட்டு மீதி செடிகளை நீக்கி விட வேண்டும்.
  • வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
  • இரண்டு வாரம் கழித்து அதிலுள்ள தேவையற்ற களைகளை நீக்க வேண்டும். பின்பு கலைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவற்றை நீக்க வேண்டும்.
  • மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு குழிக்கும் தேவையான அளவு தொழுவுரம் மற்றும் ஆட்டு உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். நன்கு இயற்கை உரமிட்டு களைகளை நீக்கி பராமரித்தாலே நல்ல விளைச்சல் தரும்.
  • ஒரு ஏக்கருக்கு சராசரியாக 15 டன் பழங்களை அறுவடை செய்யலாம்.
Water Melon Plant
Water Melon Plant
தர்பூசணியின் பயன்கள்:
  • கோடை காலத்தில் வெயிலுக்கு இதமாக உடல் சூட்டை குறைக்கும் பழங்களில் தர்பூசணி முதன்மையானது.
  • வைட்டமின்,தாதுக்கள்,கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது.
  • கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும்.
  • ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
  • நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

copied:https://agriculturetrip.com/

பப்பாளி சாகுபடி மற்றும் மருத்துவ பயன்கள்

பப்பாளி சாகுபடி மற்றும் மருத்துவ பயன்கள்


பப்பாளி ஒரு பழம் தரும் மரமாகும். இதற்கு பறங்கிப்பழம் என்று மற்றொரு பெயரும் உள்ளது.

பப்பாளியின் தாயகம் மெக்சிக்கோவாகும். தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளில் பப்பாளி அதிகமாக விளைகிறது.

எப்படி பயிரிடுவது…?
  • கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7, கூர்க்கனிடியூ மற்றும் சூரியா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
  • வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் நடவிற்கு மிகவும் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.
  • பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் பூமி சாகுபடி செய்ய ஏற்றதல்ல.
  • ஒரு எக்டருக்கு நடவு செய்ய 500 கிராம் விதைகள் தேவைப்படும்.
  • நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவேண்டும். நாற்றுக்கள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.
  • நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்ய வேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 45 செ.மீ ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும். குழிகளில் மண் மற்றும் தொழு உரம் இட்டு நீர் ஊற்றி ஆற விட வேண்டும்.
  • தயார் செய்துள்ள குழிகளில் நாற்றுகளை மையப்பகுதியில் நட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, ஒரு ஏக்கருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை கொடுக்க வேண்டும்.
  • நட்ட 20 நாட்களில் களை எடுக்க வேண்டும். செடிகளைச் சுற்றி களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். களை எடுத்தப் பின் மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நன்கு திரண்ட பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும்.
  • மகசூலானது இரகங்களை பொறுத்து வேறுபடும். கோ.2 இரகமாக இருந்தால் எக்டருக்கு 250 டன்களும், கோ. 3 இரகத்தில் 120 டன்களும், கோ.5 இரகத்தில் 250 டன்களும், கோ.8 இரகத்தில் 160 டன்களும், கோ.7 இரகத்தில் 225 டன்களும் மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
  • பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
  • பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் குணமடையும்.
  • பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.
  • பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி, விஷம் இறங்கும்.
  • அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
  • அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்குதல் குறைவு.

மாதுளைப்பழம் (Pomegranate)

மாதுளைப்பழம் (Pomegranate)

Pomogranite Fruit

மாதுளை குறுமரம் வகையை சேர்ந்த பழவகை ஆகும். இதன் தாயகம் ஈரான் நாடு. ஈரானை அடுத்து அதிக அளவில் மாதுளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் மொத்த உற்பத்தியில் 77% மகாராஷ்டிராவிலிருந்து உற்பத்தியாகிறது.

உலக நாடுகளில் ஈரான்,இந்தியாவிற்கு அடுத்தபடியாக பாக்கிஸ்தான்,பங்களாதேஷ்,சீனா,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அதிக அளவில் மாதுளை உற்பத்தி செய்கின்றது.

பயிரிடும் முறை:
  • ஜூன் முதல் டிசம்பர் மாதங்கள் மாதுளை பயிரிடுவதற்கு சிறந்த பருவங்கள் ஆகும். இந்த மாதங்களில் பயிரிடும்பொழுது சிறந்த விளைச்சலை பெற முடியும்.
  • மணல் மற்றும் உவர் மண் உட்பட எல்லா வகையான மண்ணிலும் செழிப்பாக வளரும் தன்மை உடையது.
  • பயிரிடும் நிலத்தை நன்கு உழுது 60 செ.மீ ஆழம் மற்றும் அகலம் உடைய குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் 3 மீட்டர் இடைவெளிகளை இருக்குமாறு குழிகளை எடுக்க வேண்டும். குழிகளில் தொழுஉரம் மற்றும் மண் கலந்து ஒரு வாரம் குழிகளை ஆற விட வேண்டும்.
  • பின்பு வேர் விட்ட மாதுளை குச்சிகள் அல்லது செடிகளை குழியின் நடுவில் வைத்து மண் போடு மூட வேண்டும். பின் நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. அதிக அளவு தண்ணீர் பாய்ச்ச கூடாது. ஆனால் பூக்கள் பூக்கும் பொழுதும் காய்கள் காய்க்கும் பொழுதும் அதிக அளவு நீரும் தொழுவுரமும் இட்டு நன்கு பராமரித்தால் நல்ல மகசூலை பெறலாம்.
  • மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு செடிகளுக்கும் 5 கிலோ மண்புழு உரம் மற்றும் 2 கிலோ தொழுஉரம் வைத்து வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • ஆறு மாதங்களில் செடிகளில் பூ பூக்க தொடங்கிவிடும். ஆனால் அந்த பூக்களை உதிர்த்து விட வேண்டும். குறைந்தது 24 மாதங்கள் ஆன பிறகே காப்புக்கு விட வேண்டும். அதற்கு முன்பாக காய்க்க விட்டால் செடிகளின் வளர்ச்சி தடைபடும்.
  • அடிக்கடி களைகளை நீக்கி பராமரிக்க வேண்டும். அதிக கலைகள் செடியின் வளர்ச்சியை தடுக்கும். ஆறாவது மாதத்தில் செடியில் அதிக கிளைகள் இருக்கும் , அப்பொழுது ஆரோக்கியமான நான்கு கிளைகளை விட்டுவிட்டு மீதி கிளைகளை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் செடிகள் நன்கு ஆரோகியமான வளரும்.
மாதுளைப்பழம் (Pomegranate)
மாதுளைப்பழம் (Pomegranate)
மாதுளையின் பயன்கள்:
  • மாதுளம் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளதால் சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும். எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழ ஜூஸ் அருகும்பொழுது அதிக அளவு ஆற்றல் கிடைக்கும். மாதுளை வைரஸ் கிருமிகளை உடனடியாக அழித்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்க வல்லது.
  • குடல் புண் மற்றும் வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி மாதுளை பழத்திற்கு உண்டு.
  • புதிய ரத்தத்தை உற்பத்திசெய்யும் திறன் மாதுளை பழத்திற்கு உண்டு. எனவே ரத்த சோகை உள்ளவர்கள் அதிக அளவு மாதுளை பழம் சாப்பிடும்பொழுது உடலில் அதிக அளவு ரத்தம் சுரக்கும்.
  • ஒரு ஸ்பூன் மாதுளை ஜூஸ் மற்றும் ஒரு ஸ்பூன் சந்தானம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி பாத்து நிமிடம் களைத்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

copied:https://agriculturetrip.com/

நெல் (Paddy)

நெல் (Paddy)

ஆரோக்கிய வாழ்வுக்கு சிறுதானியம்

நெல் என்பது புல்வகையை சேர்ந்த ஒருவகை தாவரமாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் தான் இதன் பூர்விகம் ஆகும். இது ஈர நிலங்களில் வளரும் தாவரமாகும். இன்றளவும் இந்தியாவில் பயிரிடப்படும் தானியங்களில் நெல் முதலிடத்தில் உள்ளது. தென் இந்தியர்களின் அன்றாட உணவுகளில் அரிசியின் பங்கு அதிகம்.

உலக அளவில் தானிய உற்பத்தியில் நெல் மூன்றாம் இடம் வகிக்கிறது. சோளம்,கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிராகும் தானியம் நெல் ஆகும்.

நெல்லின் மேலுள்ள தோல் உமி என்று அழைக்கப்படுகிறது. இது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. நெல்லின் உமி ஆல்கஹால் தொழிற்ச்சாலைகளில் பதப்படுத்தப்பட்ட பானமாக பயன்படுத்தப்படுகிறது. கோழி பண்ணைகளில் கோழி தீவனமானாகும் பயன்படுகிறது.

மேலுறை நீக்கப்பட்ட நெல்லானது அரிசி என்று அழைக்கப்படுகிறது. அரிசியைத்தான் உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ரகங்களுக்கு ஏற்றவாறு நெல்லின் விளைச்சல் காலம் மாறுபடும். 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை வளரும் ரகங்கள் உள்ளன. நெல் உற்பத்திக்கு வண்டல் மண் சிறந்தது.

நாற்றங்கால் தயாரிக்கும் முறை:
  • 1 ஏக்கர் நிலத்திற்கு 30 – 40 கிலோ விதை நெல் போதுமானதாகும். ரகங்களுக்கு ஏற்றவாறு தரமான விதைகளை அரசாங்க களஞ்சியத்தில் வாங்கியோ அல்லது முந்தய சாகுபடி நெல்லையோ பயன்படுத்தலாம்.
  • 1 சென்ட் நிலத்தை நன்கு ஏர் உழுது நீர் பாய்த்து அதில் இலை சத்துக்கள் மற்றும் தொழுவுரம் போட்டு இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
  • விதை நெல்லை சுமார் 8 – 10 மணி நேரம் ஊறவைத்து அதை ஒரு ஈரமான கோணிப்பையில் போட்டு முளைப்போட வேண்டும்.
  • அடுத்த நாள், மறுபடியும் அந்த நிலத்தை உழுது நீர் பாய்த்து சமன்படுத்தி சிறிது நேரம் தெளியவிட வேண்டும். பின்பு முளைகட்டிய விதையை அந்த நிலத்தில் சீராக தூவ வேண்டும்.
  • முதல் ஒரு வாரத்திற்கு அதிகப்படியான நீர் விடாமல் தேவையான அளவு நீர் விட்டு ஈரமாக பராமரிக்க வேண்டும். நாற்றுகள் முளைக்க ஆரம்பித்தவுடன் அதன் அளவுக்கு ஏற்ப நீர் பாய்ச்சலாம்.
  • 30 நாட்களுக்கு பின் நாற்றுகள் 10 செ.மீ நீளம் வளர்ந்த பின்பு அதனை பிடுங்கி பயிரிடப்போகும் நிலத்தில் நடலாம்.
பயிரிடும் முறை:
  • நாற்றுகள் 20 நாட்கள் வளர்ந்த பின்பு பயிரிட போகும் நிலத்தை உழுது அதில் தேவையான அளவு தழை சத்து மற்றும் தொழுவுரம் போட்டு நீர் பாய்ச்சி ஒரு வாரம் நன்கு மக்கும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நாற்றுகள் 30 நாட்கள் ஆனா பின்பு மறுபடியும் நிலத்தை நன்கு உழுது நீர் பாய்ச்சி சமன்படுத்தி கொள்ள வேண்டும். பின்பு நாற்றுகளை பிடுங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிடுங்கி வைத்துள்ள நாற்றுகளை ஒன்றுக்கொன்று 10 செ.மீ இடைவெளிகளில் இரண்டு அல்லது மூன்று நாற்றுகளை ஒன்றாக சேர்த்து 3 செ.மீ ஆழத்திற்கு நடவேண்டும்.
  • பின்பு 30 நாட்கள் வாரத்திற்கு மூன்று முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதிலுள்ள தேவையற்ற களைகளை நீக்க வேண்டும்.
  • சீராக நீர் பாய்த்து பராமரித்தால் 180 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.
நெற்பயிரின் நோய்கள்:
1) குலை நோய்: (பைரிகுலேரியா ஒரைசா)

அறிகுறிகள்:

பயிரின் எல்லா வளரும் நிலைகளிலும், எல்லாக் காற்றுவெளி பாகங்களையும் தாக்கும் தன்மையுடையது.

இலை மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் (கதிர் காம்பு) தாக்கம் அதிகமாக இருக்கும்.

இலைகளில் ஆங்காங்கே மேலெழுந்த புள்ளிகள் உருவாகும். அவை நாளடைவில் நூற்புக்கதிர் வடிவம் (மனிதனின் கண்போன்ற வடிவம்) பெறும்.

சிறுசிறு புள்ளிகள் தோன்றும் பின்னர் அவை ஒன்றிணைந்து வடிவம் பெறும்.

அதிகப்படியாக தண்டு சாய்தல் ஏற்படலாம்.

2) கதிர்க்காம்பு குலை நோய்:

கழுத்து (கதிர்க்காம்பு) கருமையடைந்து, சுருங்கிவிடும் கதிரின் காம்பு உடைந்து தொங்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களான பென்னா, பிரபாட் டிக்கானா, ‚ரங்கா, சிம்மபுரி, பல்குணா, சுவர்ணமுகி, சுவாதி, ஐ.ஆர் – 36, எம்.டி.யூ 9992, எம்.டி.யூ 1005, எம்.டி.யூ 7414.

அறுவடை செய்த பின்பு, அடித்தண்டு மற்றும் மீதமிருக்கும் வைக்கோல் புற்களை எரித்து விடவேண்டும்.

3) பாக்டீரியா ஏற்படுத்தும் இலை கருகல் நோய்:

அறிகுறிகள்:

நாற்று வாடல்.

மஞ்சள் நிற கோடுகள் இலைகளில் காணப்படும். அவை இலைக் காம்பிலிருந்து உள்நோக்கி வளரும்.

ஆரம்பத்தில் புள்ளிகளிலிருந்து அதிகாலையில், பால்போன்ற அல்லது நிறமற்ற திரவம் வெளியேறுவதைக் காணலாம்.

புள்ளிகள் மஞ்சள் நிறமாக மாறும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

நோயில்லா வித்துக்களை வாங்கவேண்டும்.

நாற்றங்காலினை தனி இடத்தில் வளர்க்க வேண்டும்.

வயலில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டவும்.

பாதிக்கப்பட்ட பயிர்கள் இருக்கும் இடத்திலிருந்து நீர் ஆரோக்கியமான பயிர்கள் உள்ள இடத்திற்கு நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எதிர்ப்புத்திறன் கொண்ட பயிரை வளர்க்கவும் – சுவர்ணா, அஜயா, தீப்தி, பத்வா மசூரி, எம்.டி.யூ 9192.

4) கதிர் உறை அழுகல் நோய்:

அறிகுறிகள்:

ஒழுங்கற்ற புள்ளிகள் தோன்றும் அவற்றின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரங்கள் அரக்கு நிறத்துடனும் காணப்படும்.

இலையின் நிறம் மங்கிக் காணப்படும்.

புள்ளிகள் தோன்றி பின்னர் ஒன்றிணைந்து இலையின் பெரும்பகுதியை ஆட்க்கொள்ளும்.

முளைக்காத நெல் குருத்துகள் அழுகிக் காணப்படும்.

பூக்கள் அரக்கு சிவப்பாக மாறிவிடும்.

வெள்ளைநிற பொடி போன்று படர்தலைக் காணலாம்.

நெற்கதிர்கள் ஆம்பிப் போய் காணப்படும். நெல் மணிகள் ஆரோக்கியமாக இராது.

தடுப்பு:

பாதிக்கப்பட்ட பயிர்களை அழித்திடல் வேண்டும்.

5) செம்புள்ளி நோய்:

அறிகுறிகள்:

நாற்ற்ஙகால் மற்றும் பயிரைத் தாக்கும்.

நாற்றுகளில் குலைநோய் ஏற்படுத்திடும்.

இலைகளில் புள்ளிகளை ஏற்படுத்தும்.

வித்துக்களும் பாதிக்கப்படும்.

நெற்கதிரில் செம்மை நிறம் படரும்.

இந்நோய் 50 சதவிகித இழப்பை ஏற்படுத்தும்.

தடுப்பு முறை:

இந்த பூஞ்சானை அழிக்க 10-12 நிமிடத்திற்கு வெந்நீரில் வத்துகளை, 53-540 சி-யில், போட்டுவைத்து பின்னர் உபயோகிக்க வேண்டும்.

6) நெற்பழம் நோய்:

அறிகுறிகள்:

நெல் மணிகள் தாக்கப்பட்டு மஞ்சள் நிறமாக மாறிவிடும் அவற்றலிருந்து பூஞ்சான் வளரும்.

பட்டுபோன்ற வளர்ச்சி காணப்படும்.

முதிர் நிலையில் இந்த பூஞ்சானின் வித்துக்கள் மஞ்சளிலிருந்து பச்சைகருமை நிறமாக மாறிவிடும்.

கதிரில் சில நெல் மணிகள் மட்டுமே பாதிக்கப்படும் மற்றவை நன்றாக இருக்கும்.

தடுப்பு:

காய்ந்த பயிர் பாகம் மற்றும் அடிதண்டுகளை அழித்திட வேண்டும்.

7) நெல் துங்ரோ நச்சுயிரி:

அறிகுறிகள்:

வளர்ச்சி நின்று விடும். அதனால் கட்டுடையாக நெற்பயிர்கள் காணப்படும். கதிர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

இலைகள், துரு நிறத்தில் காணப்படும்.

தாமதமாக பூ பூக்கும் கதிர்கள் சிறியதாக காணப்படும்.

நெல் மணிகள், கதிரில், குறைவாகக் காணப்படும்.

தடுப்பு:

தடுப்பு சக்தி கொண்ட பயிர்கள் – எம்.டி.யூ 9992, எம்.டி.யூ 1002, எம்.டி.யூ 1005, சுரேகா, விக்ரமர்யா, பரணி, ஐ.அர்.36.

பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் விதைச் செடிகளை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்தலாம்.

அரிசியின் பயன்கள்:
  • அரிசியில் அதிகஅளவு கார்போஹைட்ரெட் உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்தாகும்.
  • உடல் மெலிந்து காணப்படுபவர்கள் பச்சரிசி சாப்பிட்டால் கொழுப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். இதனால் உடல் எடை கூடும்.
  • சிகப்பு அரிசியில் அதிக அளவு பைபர் உள்ளதால் ரத்தத்தில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

copied:https://agriculturetrip.com/

add-15

<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?p...